19 12
இலங்கைசெய்திகள்

சீரற்ற காலநிலையால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள விவசாய நிலங்கள்!

Share

சீரற்ற காலநிலையால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள விவசாய நிலங்கள்!

கடும் மழையுடன் கூடிய காலநிலையால் சுமார் 375,000 ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக விவசாய மற்றும் விவசாய காப்புறுதி சபையின் தலைவர் பிரேமசிறி ஜசிங்க ஆராச்சி தெரிவித்துள்ளார்.

வெள்ள நிலைமை தொடர்பில் இன்று(30.11.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்படி வெள்ள நீர் வழிந்தோடிய பிறகு பயிர்களின் சேதம் குறித்து மதிப்பிடப்படும் என அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டமே அதிகளவிலான சேதத்தை சந்தித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வெள்ளத்தினால் அழிவடைந்த 06 வகையான பயிர்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்திருந்தார்.

அதன்படி, நெல், சோளம், வெங்காயம், சோயா, ஆகிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளது எனவும், முழுமையாக சேதமடைந்த விளைநிலங்களுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...