24 660b731f1cf1c
இலங்கைசெய்திகள்

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட நடிகை மற்றும் கணவனை கைது செய்ய முடியாமல் திணறும் பொலிஸார்

Share

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட நடிகை மற்றும் கணவனை கைது செய்ய முடியாமல் திணறும் பொலிஸார்

30 லட்சம் ரூபா மோசடி தொடர்பில் நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் லென்லி ஜோன்சன் ஆகியோரை கைது செய்ய முடியாமல் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திணறுவதாக தெரியவந்துள்ளது.

6 நாட்களுக்கு முன்னர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பொரலஸ்கமுவவில் உள்ள தமிதா அபேரத்னவின் வீட்டிற்கு சென்றிருந்த போதிலும், இருவரும் ஏற்கனவே வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரியாவுக்கு அனுப்புவதாகக் கூறி 30 இலட்சம் ரூபாவை ஏமாற்றியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமித அபேரத்ன தம்பதியினரின் நிலுவையில் இருந்த பிணை விண்ணப்பத்தை கடந்த 27ஆம் திகதி நீதவான் திலின கமகே நிராகரித்தார்.

அதற்கமைய சந்தேக நபர்களை கைது செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட பொலிஸ் குழு பொரலஸ்கமுவ பபிலியான இல்லத்திற்குச் சென்றது. ஆனால் இருவரும் வீட்டில் இல்லை. தமிதா அபேரத்னவின் தாய் மட்டுமே வீட்டில் இருந்தார்.

எவ்வாறாயினும், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அன்றைய தினம் இரவு முதல் மறுநாள் பிற்பகல் வரை அவரது வீட்டிற்கு அருகில் தங்கியிருந்த போதும் ஏமாற்றத்துடன் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு திரும்பியதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

Share

Recent Posts

தொடர்புடையது
archuna 090325 seithy
செய்திகள்அரசியல்இலங்கை

அவருக்கு என்ன நடந்தது”: தந்தை காணாமல் போனது குறித்துக் கண்ணீருடன் கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாட்டின் சுகாதார முறைமையின் குறைபாடுகள் மற்றும் அரசியல் காரணங்களுக்காகத் தான்...

images 2
செய்திகள்இந்தியா

இந்தியத் தொழிலதிபர் மகனின் ஆடம்பரத் திருமணம் இலங்கையில்: சுற்றுலாத் துறைக்கு ரூ.35 மில்லியன் வருவாய் ஈட்டும் என எதிர்பார்ப்பு!

இந்தியாவின் பிரபலத் தொழிலதிபரான மோகன் சுரேஷ் தனது மகன் ஜஹ்ரான் சுரேஷின் திருமணத்தை நடத்த இலங்கையைத்...

The earthquake in Uttarkashi occurred around 5km b 1694420274586 1701495114647
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் 24 மணிநேரத்துக்குள் மீண்டும் நிலநடுக்கம்: 3.3 ரிக்டர் அளவில் பதிவு!

பங்களாதேஷ் நாட்டில் 24 மணி நேரத்துக்குள் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டாக்காவின்...

articles2FdhDDZcYNvXEcbQ3844QF
உலகம்செய்திகள்

வியட்நாம் வெள்ளத்தில் 55 பேர் பலி: 52 ஆயிரம் வீடுகள் மூழ்கின; 32 இலட்சம் கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டன!

வியட்நாமில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக...