tamilni 169 scaled
இலங்கைசெய்திகள்

நடிகர் விஜயை சந்திக்க ஆர்வமாக காத்திருக்கும் ராஜபக்ச குடும்பத்தினர்

Share

நடிகர் விஜயை சந்திக்க ஆர்வமாக காத்திருக்கும் ராஜபக்ச குடும்பத்தினர்

தென்னிந்திய நடிகர் விஜயை சந்திக்க ராஜபக்ச குடும்பம் ஆர்வமாக உள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் The Greatest Of All Time படத்தின் ஒரு பகுதி இலங்கையில் படமாக்கப்படவுள்ளது.

இலங்கையிலுள்ள கிரிக்கெட் மைதானம் மற்றும் விமான நிலையங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக இந்திய திரைப்பட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் படக்குழுவினர் விரைவில் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜய் படப்பிடிப்பிற்காக இலங்கை வந்தால், அவரை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினர் ஆர்வமாக உள்ளனர். அதற்கான முயற்சியில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் போர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட ராஜபக்ச குடும்பத்தை விஜய் சந்தித்தால், தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலை ஏற்படும்.

அரசியலில் முழுநேரமாக ஈடுபடவுள்ளதாக விஜய் அறிவித்துள்ள நிலையில், இலங்கை விஜயம் நெருக்கடியை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...