tamilni 169 scaled
இலங்கைசெய்திகள்

நடிகர் விஜயை சந்திக்க ஆர்வமாக காத்திருக்கும் ராஜபக்ச குடும்பத்தினர்

Share

நடிகர் விஜயை சந்திக்க ஆர்வமாக காத்திருக்கும் ராஜபக்ச குடும்பத்தினர்

தென்னிந்திய நடிகர் விஜயை சந்திக்க ராஜபக்ச குடும்பம் ஆர்வமாக உள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் The Greatest Of All Time படத்தின் ஒரு பகுதி இலங்கையில் படமாக்கப்படவுள்ளது.

இலங்கையிலுள்ள கிரிக்கெட் மைதானம் மற்றும் விமான நிலையங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக இந்திய திரைப்பட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் படக்குழுவினர் விரைவில் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜய் படப்பிடிப்பிற்காக இலங்கை வந்தால், அவரை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினர் ஆர்வமாக உள்ளனர். அதற்கான முயற்சியில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் போர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட ராஜபக்ச குடும்பத்தை விஜய் சந்தித்தால், தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலை ஏற்படும்.

அரசியலில் முழுநேரமாக ஈடுபடவுள்ளதாக விஜய் அறிவித்துள்ள நிலையில், இலங்கை விஜயம் நெருக்கடியை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...