rtjy 23 scaled
இலங்கைசெய்திகள்

நிதி இராஜாங்க அமைச்சரின் கடுமையான எச்சரிக்கை

Share

நிதி இராஜாங்க அமைச்சரின் கடுமையான எச்சரிக்கை

புதிய ஸ்டிக்கர் முறையை திட்டமிட்டு மாற்றியமைத்து மதுபானத்தை விற்பனை செய்து மோசடி நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவான்வெல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

புதிய ஸ்டிக்கர் முறையை திட்டமிட்டு மாற்றியமைத்து மதுபானத்தை விற்பனை செய்பவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை வரை அவ்வாறான ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 5 இலட்சம் ரூபா வரை அபராதம் அறவிடப்படும். தண்டனையை மீறிச் செயல்படுபவர்களின் மதுபானசாலைக்கான அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படும் என குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...