10 36
இலங்கைசெய்திகள்

சட்டவிரோதமாக பாதுகாப்புப் படைகளை விட்டு வெளியேறியவர்களுக்கு எச்சரிக்கை

Share

சட்டவிரோதமாக பாதுகாப்புப் படைகளை விட்டு வெளியேறியவர்களுக்கு எச்சரிக்கை

ஆயுதப் பயிற்சி பெற்ற பின் சட்டவிரோதமாக பாதுகாப்புப் படைகளை விட்டு வெளியேறியவர்களுக்கு பாதுகாப்பு செயலாளர் ஓய்வுநிலை எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஆயுதப் பயிற்சி பெற்றதன் பின் சட்டவிரோதமாக பாதுகாப்புப் படைகளை விட்டு வெளியேறி, திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளவர்களுடன் தொடர்பினை பேணிவருவோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நபர்கள், திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களுடன் தொடர்புகொள்ளும் போக்கு அதிகரிப்பதை அவதானிக்க முடிகிறது.

ஆயுதப் பயிற்சி பெற்று இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களை மிகக் குறுகிய காலத்தில் கைது செய்யும் திறன் இராணுவத்திற்கும் பொலிஸாருக்கும் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...