குவைத்தில் சிக்கித்தவித்த 54 பெண்கள்!
இலங்கைசெய்திகள்

குவைத்தில் சிக்கித்தவித்த 54 பெண்கள்!

Share

குவைத்தில் சிக்கித்தவித்த 54 பெண்கள்!

குவைத்தில் வீசா இன்றி சட்டவிரோதமாக இலங்கைக்கு வரமுடியாமல் தங்கியிருந்த 54 இலங்கை வீட்டுப்பணியாளர்கள் இலங்கை தூதரகத்தின் தலையீட்டின் பேரில் நேற்று (16) நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அநுராதபுரம், பொலன்னறுவை, காலி, மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், நோய், குடும்பப் பிரச்சினைகள் மற்றும் விசா காலாவதியானமை ஆகிய காரணங்களால் அவர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் அவர்களுக்கு தற்காலிக கடவுச்சீட்டுகளை வழங்கியுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தவுடன், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அவர்கள் தங்கள் பிரதேசங்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்து செலவுகளை வழங்கியுள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....