24 66922d7f96ac8
இலங்கைசெய்திகள்

சுங்கத்திணைக்கள வேலை நிறுத்தத்தால் சிக்கியுள்ள கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை

Share

சுங்கத்திணைக்கள வேலை நிறுத்தத்தால் சிக்கியுள்ள கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை

சுங்கத் திணைக்களத்தின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக சிக்கியுள்ள 5,000 கொள்கலன்களை அகற்றுவதற்கான அவசரத் திட்டம் தயாரிக்கப்பட்டு, இந்த வார இறுதியில் விடுவிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siambalapitiya) தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல ராஜசிங்க கல்லூரியில் உள்ளக விளையாட்டரங்கின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் வாரத்திற்குள் இந்த நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் நெருங்கும் போது தொழிற்சங்க நடவடிக்கை எடுப்பது வழமையானது எனவும் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகளுடன் இணைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தொழிற்சங்கங்கள் முடிவெடுக்கும் போது அவர்களின் தொழில், நிறுவனம் மற்றும் தற்போதைய தேசிய நிலைமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இந்நிலையில், வேலைநிறுத்தங்கள் தொழிற்சங்கங்களின் கடைசி முயற்சியாக இருக்க வேண்டுமே தவிர முதல் நடவடிக்கையாக இருக்கக்கூடாது என்றும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
62a15150 5261 11f0 a2ff 17a82c2e8bc4.jpg
செய்திகள்உலகம்

வரலாறு படைத்த ஜோஹ்ரான் மம்தானி: நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இளம் மேயராகத் தேர்வு!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு...

11ad0a96d3aaa13d73a54e4883f2f59c
உலகம்செய்திகள்

கென்டகி விமான நிலையத்தில் கோர விபத்து: சரக்கு விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்தது – 3 பேர் பலி!

அமெரிக்காவின் கென்டகி மாகாணம், லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு...

23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...