24 66922d7f96ac8
இலங்கைசெய்திகள்

சுங்கத்திணைக்கள வேலை நிறுத்தத்தால் சிக்கியுள்ள கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை

Share

சுங்கத்திணைக்கள வேலை நிறுத்தத்தால் சிக்கியுள்ள கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை

சுங்கத் திணைக்களத்தின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக சிக்கியுள்ள 5,000 கொள்கலன்களை அகற்றுவதற்கான அவசரத் திட்டம் தயாரிக்கப்பட்டு, இந்த வார இறுதியில் விடுவிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siambalapitiya) தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல ராஜசிங்க கல்லூரியில் உள்ளக விளையாட்டரங்கின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் வாரத்திற்குள் இந்த நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் நெருங்கும் போது தொழிற்சங்க நடவடிக்கை எடுப்பது வழமையானது எனவும் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகளுடன் இணைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தொழிற்சங்கங்கள் முடிவெடுக்கும் போது அவர்களின் தொழில், நிறுவனம் மற்றும் தற்போதைய தேசிய நிலைமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இந்நிலையில், வேலைநிறுத்தங்கள் தொழிற்சங்கங்களின் கடைசி முயற்சியாக இருக்க வேண்டுமே தவிர முதல் நடவடிக்கையாக இருக்கக்கூடாது என்றும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...