rtjy 302 scaled
இலங்கைசெய்திகள்

ஒழுங்கான சேவை வழங்க தவறும் அமைச்சுக்கள் தொடர்பில் நடவடிக்கை

Share

ஒழுங்கான சேவை வழங்க தவறும் அமைச்சுக்கள் தொடர்பில் நடவடிக்கை

பொதுமக்களுக்கு அமைச்சுக்கள் ஒழுங்கான சேவை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்மூலம் சில அமைச்சு செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், மக்கள் நலக் கொள்கையை முறையாக நடைமுறைப்படுத்தத் தவறிய சில அமைச்சுச் செயலாளர்கள் நீக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை படிப்படியாக மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் எடுத்து வரும் பொருளாதார மற்றும் சமூக நலன்புரி கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிக்காத அமைச்சின் செயலாளர்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மக்களுக்கு உரிய சேவை கிடைக்கவில்லை என பொதுமக்களின் முறைப்பாடுகளை பெற்றுக்கொண்ட அமைச்சின் செயலாளர்கள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...