24 67007b99bff80
இலங்கைசெய்திகள்

முன்னாள் அரசியல் தலைமைகளின் சுகபோக வாழ்க்கையை அம்பலப்படுத்த தயாராகும் அநுர தரப்பு

Share

முன்னாள் அரசியல் தலைமைகளின் சுகபோக வாழ்க்கையை அம்பலப்படுத்த தயாராகும் அநுர தரப்பு

கடந்த காலங்களில் பொருளாதார பாதிப்பினை நாட்டு மக்கள் எதிர்கொண்டபோது முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் தமது வாழ்க்கையை வாழ்ந்த விதத்தை மக்களுக்கு வெளிப்படுத்த போவதாக தேசிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஓய்வுபெற்ற ஜனாதிபதிகள் பயன்படுத்தும் உத்தியோகபூர்வ இல்லங்களை பொதுமக்கள் பார்வையிட அனுமதிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக லால்காந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டி யட்டிநுவரயில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “மக்கள் அவதியுறும் வேளையில் இந்நாட்டு தலைவர்கள் எவ்வாறான சுகபோக வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர் என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் முன்னாள் அரசியல்வாதிகளின் குடியிருப்புகள் மக்களின் பார்வைக்கு விடப்படவுள்ளதான செய்தியை அறிந்து சிலர் அச்சத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளின் ஆடம்பரமான உடமைகளை வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல முயற்சித்துள்ளனர்.

இந்த நாட்டின் அரசியல்வாதிகள் மக்களின் வளங்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை அறியாதவர்கள் அவற்றை அறிந்து கொள்ள வேண்டும்.

மக்கள் பணம், எவ்வாறு வீணடிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.” எனவும் லால்காந்த கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...