rtjy 6 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

சஜித்துக்கு எதிராக நடவடிக்கை : பிரதமர் வலியுறுத்து

Share

சஜித்துக்கு எதிராக நடவடிக்கை : பிரதமர் வலியுறுத்து

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் நிலையியற் கட்டளை சட்டம் தொடர்பில் கேள்விகளை எழுப்பும்போது அதனை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என பிரதமர் தினேஷ் குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் இது குறித்து சபாநாயகர் உரிய தீர்மானத்தை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (01.12.2023) எதிர்க்கட்சித் தலைவர் நிலையியற் கட்டளை சட்டம் தொடர்பில் கேள்விகளை எழுப்பிய போது குறித்த கேள்விக்கு மேலதிகமாக மேலும் சில கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இதன் போது “எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய எந்த கேள்விக்கு பதில் கூற வேண்டும்?” என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர சபாநாயகரிடம் வினவினார்.

இந்நிலையில், சபையில் ஏற்பட்ட சர்ச்சையின் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன் போது பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,

“நிலையியற் கட்டளை சட்டம் தொடர்பில்(27/2) கேள்விகளை எழுப்பும் போது அதற்கு மேலதிகமான கேள்வியையும் எழுப்ப முடியுமா?

அது தொடர்பில் உத்தரவொன்றை சபாநாயகர் பிறப்பிக்க வேண்டும், நாளை முதல் அது நடைமுறைக்கு வர வேண்டும்.

சபாநாயகருக்கோ அல்லது எதிர்க்கட்சித் தலைவருக்கோ தேவையான விதத்தில் நிலையியற் கட்டளையை துஸ்பிரயோகம் செய்ய முடியுமானாலும் ஆளும் கட்சி அவ்வாறு செயற்படாது.

நாடாளுமன்றத்திலிருந்து விலகிச் செல்லும் தினத்திலும் குறித்த நிலையியற் கட்டளை எதிர்காலத்திற்காக பாதுகாத்து வழங்கப்பட வேண்டும்.” என்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...