2 6
இலங்கைசெய்திகள்

சட்டத்தை மீறிய வேட்பாளர்கள்: எடுக்கப்பட்டவுள்ள அதிரடி நடவடிக்கை

Share

சட்டத்தை மீறிய வேட்பாளர்கள்: எடுக்கப்பட்டவுள்ள அதிரடி நடவடிக்கை

கடந்த பொதுத் தேர்தலில் செலவிடப்பட்ட பணம் தொடர்பில் தெரிவிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எஸ்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலுக்குச் செலவிடப்பட்ட பணத்தின் தொகையை இதுவரை வெளியிடாத வேட்பாளர்கள் தேர்தல் சட்டத்தை மீறுபவர்களாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செலவு அறிவிக்கையை சமர்பிக்க நேற்று வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்த நிலையில், இனிமேலும் அது நீடிக்கப்படாது என்றும் தவிசாளர் கூறியுள்ளார்.

இதேவேளை, பதிவு தபாலில் அல்லது அறிவித்தல் மூலமாக செலவு அறிக்கையை அனுப்பியவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தேர்தலில் தோற்றியிருந்த வேட்பாளர்களில் 2000க்கும் மேற்பட்டவர்கள் எவ்வளவு பணம் செலவழித்துள்ளார்கள் என்பது குறித்து அறிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....