2 6
இலங்கைசெய்திகள்

சட்டத்தை மீறிய வேட்பாளர்கள்: எடுக்கப்பட்டவுள்ள அதிரடி நடவடிக்கை

Share

சட்டத்தை மீறிய வேட்பாளர்கள்: எடுக்கப்பட்டவுள்ள அதிரடி நடவடிக்கை

கடந்த பொதுத் தேர்தலில் செலவிடப்பட்ட பணம் தொடர்பில் தெரிவிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எஸ்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலுக்குச் செலவிடப்பட்ட பணத்தின் தொகையை இதுவரை வெளியிடாத வேட்பாளர்கள் தேர்தல் சட்டத்தை மீறுபவர்களாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செலவு அறிவிக்கையை சமர்பிக்க நேற்று வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்த நிலையில், இனிமேலும் அது நீடிக்கப்படாது என்றும் தவிசாளர் கூறியுள்ளார்.

இதேவேளை, பதிவு தபாலில் அல்லது அறிவித்தல் மூலமாக செலவு அறிக்கையை அனுப்பியவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தேர்தலில் தோற்றியிருந்த வேட்பாளர்களில் 2000க்கும் மேற்பட்டவர்கள் எவ்வளவு பணம் செலவழித்துள்ளார்கள் என்பது குறித்து அறிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...