tamilni 95 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு அழுத்தம்!! ஐ.நா கோரிக்கை

Share

இலங்கைக்கு அழுத்தம்!! ஐ.நா கோரிக்கை

பொறுப்புக்கூறல் தொடர்பில் சர்வதேச சமூகம் இலங்கையின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் குற்றச்செயல்களுக்கு பொறுப்புகூறல் மிகவும் இன்றியமையாதது எனவும் தெரிவித்துள்ளது.

போர் முடிவடைந்து 14 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையிலும் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் வேதனையுடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

போர் குற்றச்செயல்கள் அண்மைய மனித உரிமை மீறல்கள், ஊழல் மோசடிகள், அதிகார துஷ்பிரயோகம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பிலான பொறுப்புகூறல் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முன்னோக்கி நகர வேண்டுமாயின் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும்,பொறுப்புகூறல் விவகாரத்தில் இலங்கை தொடர்ந்தும் பின்னடைவை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

உண்மையை கண்டறிதல் மட்டும் போதுமானதல்ல எனவும் பொறுப்புகூறல் மற்றும் மாற்றங்களை நடைமுறைபடுத்தக்கூடிய அரசியல் விருப்பம் என்பனவும் மிகவும் அத்தியாவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் குண்டு தாக்குதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பில் சர்வதேச உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் ஏற்கனவே அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இலங்கையின் பொருளாதார பிரச்சினைக்கு சர்வதேச சமூகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அதேவேளை, குற்றசெயல்களுக்கு பொறுப்புக்கூறல் வெளிப்படைத்தன்மை, நல்லாட்சி ஆகிய விடயங்களில் அர்த்தபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதனை இலங்கைக்கு வலியுறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கையின் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து நிறுவன ரீதியான மாற்றங்களை, மறுசீரமைப்புகளை செய்து குற்றச்செயல்களுக்கு பொறுப்புகூறல், நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் மற்றும் மனித உரிமைகளை உறுதி செய்தல் ஆகிய விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும் என மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 4 5
செய்திகள்அரசியல்இலங்கை

மத்துகம பிரதேச சபை தவிசாளர் சரணடைவு: நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டது!

மத்துகம பிரதேச சபை செயலாளரைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த அந்த சபையின் தவிசாளர் கசுன் முனசிங்க,...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரியில் குரங்குத் தொல்லையை ஒழிக்க 20 கமக்காரர்களுக்கு இறப்பர் துப்பாக்கிகள் வழங்கல்!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி – தென்மராட்சி பிரதேசத்தில் விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் குரங்குத் தொல்லையைக்...

4JVJ5DK AFP 20251227 89488ZV v2 HighRes FilesYemenConflictProtestUaeSaudi jpg
செய்திகள்உலகம்

ஏமனிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்: சவுதி – அபுதாபி விரிசல் பின்னணியா?

ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டிருந்த தனது படைகளைத் திரும்பப் பெறுவதாக ஐக்கிய அரபு அமீரகம்...

image baba9371d9
செய்திகள்அரசியல்இலங்கை

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க மேலதிக அவகாசம்: ஜனவரி 31 வரை நீடிப்பு!

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை (Firearm Licenses) புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை மேலும் ஒரு மாதத்தினால் நீடிக்கப்...