tamilni 292 scaled
இலங்கைசெய்திகள்

வாகன விபத்துக்களில் ஐவர் பரிதாப மரணம்!

Share

வாகன விபத்துக்களில் ஐவர் பரிதாப மரணம்!

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இரண்டு இளைஞர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுநாயக்க விமான நிலையம் மினுவாங்கொடை பிரதான வீதியின் ஆண்டியம்பலம் மத்திய மருந்தகத்துக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மினுவாங்கொடையில் இருந்து விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி எதிர்த் திசையில் இருந்து வந்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதியும் பின் இருக்கையில் பயணித்த இளைஞரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.

தபெம்முல்ல மற்றும் மகேவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 19 மற்றும் 25 வயதுடையவர்களே உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று வாத்துவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் 52 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் 56 வயதுடைய மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் உயிரிழந்துள்ளார்.

அம்புலுவாவ, ஹெம்மாதகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 75 வயதுடைய பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...