tamilni 139 scaled
இலங்கைசெய்திகள்

இரண்டு மாதங்களில் 341 உயிரிழப்புகள் பதிவு

Share

இரண்டு மாதங்களில் 341 உயிரிழப்புகள் பதிவு

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் நாடு முழுவதிலும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 341 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுமார் 324 வாகன விபத்துக்களில் இவ்வாறு மரணங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் (06.03.2024) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வாகன விபத்துக்களில் 651 பேர் படுகாயமடைந்துள்ளனர். அத்துடன் 1355 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மோட்டார்சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி விபத்துக்களினால் அதிகளவு உயிர்ச் சேதங்கள் பதிவாகியுள்ளன.

வீதிக் கடவையை பாதசாரிகள் கடக்கும் போது, வீதிக் கடவையில் காலை வைத்தாலே அந்த பாதை பாதசாரிக்கு சொந்தமானது என்பதனை வாகனம் செலுத்துவோர் கவனத்தில் கொண்டு வாகனங்களை செலுத்த வேண்டும்.

பாதையை கடப்பதற்கு பாதசாரிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...