13 30
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் இவ்வருடம் வீதி விபத்துக்களில் எட்டு உயிர்கள் பலி

Share

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் வீதி விபத்துக்கள் காரணமாக எட்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தின் வீதி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து தொடர்பான இந்த மாதத்திற்கான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்ற இந்த கலந்துரையாடலின் போதே குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி போக்குவரத்துகளில் அதிகரித்த வேகம், மதுபோதையில் வாகனம் செலுத்துதல், வீதிகளில் கால்நடைகளின் நடமாட்டம் என்பவற்றினால் வீதிபத்துக்கள் அதிகரித்து வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு இடம்பெற்ற வீதி விபத்துகளில் 28 பேர் உயிரிழந்துள்ளதுடன், 58 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளனர் எனவும் கலந்துரையாடல் மூலமாக தெரியவந்துள்ளது.

மேலும் எதிர்காலத்தில் விபத்துக்களை தடுப்பது தொடர்பிலும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி ஆர்ப்பாட்டம்: கைது செய்யப்பட்ட வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு – தையிட்டி பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட...

25 68123cd9dd1b1
செய்திகள்இலங்கை

எரிபொருள் இருப்பு உறுதி; ஜனவரி விலை திருத்தம் குறித்து இன்னும் முடிவில்லை – கனியவளக் கூட்டுத்தாபனம்!

தேசிய எரிபொருள் தேவையை எவ்விதத் தடையுமின்றி நிறைவு செய்யத் தேவையான போதியளவு இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக...

google logo
செய்திகள்உலகம்

ஊழியர்களை சர்வதேசப் பயணங்களைத் தவிர்க்குமாறு கூகுள் எச்சரிக்கை!

அமெரிக்க விசா வைத்திருக்கும் தனது ஊழியர்கள் சர்வதேசப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என கூகுள் நிறுவனம்...

image 42fd4006b9
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மீளமைக்க யுனிசெப் ஆதரவு: பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் முக்கிய சந்திப்பு!

அண்மைக்கால அனர்த்தங்களினால் சேதமடைந்த பாடசாலைக் கட்டமைப்புகளைச் சீரமைப்பது மற்றும் மாணவர்களின் கல்வியைத் தொடர்வது குறித்து பிரதமர்...