13 30
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் இவ்வருடம் வீதி விபத்துக்களில் எட்டு உயிர்கள் பலி

Share

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் வீதி விபத்துக்கள் காரணமாக எட்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தின் வீதி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து தொடர்பான இந்த மாதத்திற்கான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்ற இந்த கலந்துரையாடலின் போதே குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி போக்குவரத்துகளில் அதிகரித்த வேகம், மதுபோதையில் வாகனம் செலுத்துதல், வீதிகளில் கால்நடைகளின் நடமாட்டம் என்பவற்றினால் வீதிபத்துக்கள் அதிகரித்து வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு இடம்பெற்ற வீதி விபத்துகளில் 28 பேர் உயிரிழந்துள்ளதுடன், 58 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளனர் எனவும் கலந்துரையாடல் மூலமாக தெரியவந்துள்ளது.

மேலும் எதிர்காலத்தில் விபத்துக்களை தடுப்பது தொடர்பிலும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...