24 66404297130e2
இலங்கைசெய்திகள்

தண்டனை சட்ட திருத்தம் மூலம் கைதிகளுக்கு வாய்ப்பு

Share

தண்டனை சட்ட திருத்தம் மூலம் கைதிகளுக்கு வாய்ப்பு

தண்டனைச் சட்டத் திருத்தத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கிய பின்னர், நீதிமன்றக் காவலில் இருக்கும் காலமும், மேன்முறையீட்டு வழக்கின் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் காலமும், குற்றவாளி ஒருவரின் மொத்த சிறைத் தண்டனையிலிருந்து குறைக்கப்படும் என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeydasa Rajapaksha) தெரிவித்துள்ளார்.

சில கைதிகளுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைகளை ஆராயும்போது, சில கைதிகள் தடுப்புக்காவலிலும், மேல்முறையீட்டின்போதும் அதிக காலத்தை கழிப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்தே, இந்த திருத்தம் கொண்டு வரப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

சட்டம், நடைமுறைக்கு வந்ததும் மேல் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு நிவாரண காலம் குறித்து முடிவு செய்யும், என்று அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட மாட்டாது என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...