24 66404297130e2
இலங்கைசெய்திகள்

தண்டனை சட்ட திருத்தம் மூலம் கைதிகளுக்கு வாய்ப்பு

Share

தண்டனை சட்ட திருத்தம் மூலம் கைதிகளுக்கு வாய்ப்பு

தண்டனைச் சட்டத் திருத்தத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கிய பின்னர், நீதிமன்றக் காவலில் இருக்கும் காலமும், மேன்முறையீட்டு வழக்கின் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் காலமும், குற்றவாளி ஒருவரின் மொத்த சிறைத் தண்டனையிலிருந்து குறைக்கப்படும் என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeydasa Rajapaksha) தெரிவித்துள்ளார்.

சில கைதிகளுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைகளை ஆராயும்போது, சில கைதிகள் தடுப்புக்காவலிலும், மேல்முறையீட்டின்போதும் அதிக காலத்தை கழிப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்தே, இந்த திருத்தம் கொண்டு வரப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

சட்டம், நடைமுறைக்கு வந்ததும் மேல் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு நிவாரண காலம் குறித்து முடிவு செய்யும், என்று அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட மாட்டாது என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...