இலங்கைசெய்திகள்

பிள்ளையானைப் பற்றிப் பேசாவிட்டால் களுவாஞ்சிக்குடி அஷ்ரப்பிற்கு நித்திரை வராது : சாடும் கருணா

Share
14 2
Share

களுவாஞ்சிக்குடி அஷ்ரப்பிற்கு பிள்ளையானைப் பற்றிப் பேசாவிட்டால் நித்திரை வருவதில்லை கருணா அம்மான் (Karuna Amman) தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனையில் இடம்பெற்ற கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், களுவாஞ்சிக்குடி அஷ்ரப்பின் வாயில் வரும் வார்த்தை பிள்ளையான் பிள்ளையான், பிள்ளையான பற்றி பேசாவிட்டால் அவருக்கு நித்திரை வருவதில்லை.

அரசியல் பழிவாங்கலினால் திட்டமிட்டு பிள்ளையானை கைது செய்தார்கள். இந்த உலகம் முழுவதும் பிள்ளையான் பிள்ளையான் என கத்துகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

72 வருடங்களுக்கு மேலாக வீட்டுக்கு வாக்களித்து வாக்களித்து வீடும் இல்லாமல் தமிழ் மக்கள் நடுத்தெருவில் கொண்டு வந்தவர்கள்தான் தமிழரசுக்கட்சியினர் என இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் குறிப்பிட்டுள்ளார்.

போராளிகளின் புதை குழிகளில் நின்று கேவலமாக வாக்கு கேட்கும் நீங்கள் போராளிகளின் குடும்பங்களை புதைகுழிக்குள் கொல்லாமல் பாதுகாக்க முடியாமல் நிற்கின்றீர்களே வெட்கம் இல்லையா. எங்களை விமர்சிப்பவர்கள் அனைவரும், நாங்கள் போட்ட பாதைகளால்தான் செல்கிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...