tamilnih 53 scaled
இலங்கைசெய்திகள்

வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

Share

இலங்கையில் பொது இடங்கள், நடைபாதைகள், தனியார் பாதைகளில் மற்றும் பாதுகாப்பான இடத்தில் வாகனத்தை நிறுத்தும் போது அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாகனம் நிறுத்தப்பட்ட இடங்களில் வாகனங்களில் இருந்து எரிபொருள் திருடப்படுவதாக தெரியவந்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 03 இல் வாகனம் நிறுத்திய பின்னர் காரில் இருந்து பெட்ரோல் திருடப்பட்டதால் பாதிக்கப்பட்டவர் ஒருவர் பேஸ்புக் மூலம் பதிவொன்றை பதிவிட்டு எச்சரித்துள்ளார்.

“நாங்கள் முதலில் நாவல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முழு தொட்டியையும் நிரப்பினோம். பின்னர் 5 ஆம் திகதி சாப்பிடுவதற்காக கடைக்கு சென்றோம்.

நிறுத்துமிடத்தில் வாகனங்கள் நிரம்பியதால் பாதைக்கு அருகில் உள்ள வீதியில் நிறுத்தினோம். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, நாங்கள் வாகனத்திற்கு திரும்பினோம்,

கடுமையான பெட்ரோல் வாசனை இருப்பதைக் கவனித்தோம். உள்ளே நுழைந்து காரை ஓட்ட ஆரம்பித்த போது எரிபொருள் மீட்டர் கிட்டத்தட்ட வெறுமையாக இருந்தது.

நாங்கள் காரின் வெளியே சோதனை செய்தோம், ஒரு கத்தி மற்றும் பெட்ரோல் வடித்த தடங்கள் காணப்பட்டது.

நாங்கள் காரை வேறொரு எரிபொருள் நிலையத்திற்கு கொண்டு சென்றோம், அங்கு சரிபார்த்ததில், எரிபொருள் குழாய் அடியில் இருந்து பெட்ரோல் வெளியேற்றப்பட்டதை கவனித்தோம்.

இதுபோன்ற பல சம்பவங்கள் வெளிப்படையாகவே நடந்துள்ளதென வாகனத்தை சரிப்பாத்தவர் தெரிவித்துள்ளார்.

எனவே வாகனத்தை நிறுத்தும் போது கவனமாக இருங்கள். வாகனம் பாதுகாப்பாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம், ஆனால் அவ்வாறான பாதுகாப்புகள் இல்லை” என பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...