tamilnih 53 scaled
இலங்கைசெய்திகள்

வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

Share

இலங்கையில் பொது இடங்கள், நடைபாதைகள், தனியார் பாதைகளில் மற்றும் பாதுகாப்பான இடத்தில் வாகனத்தை நிறுத்தும் போது அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாகனம் நிறுத்தப்பட்ட இடங்களில் வாகனங்களில் இருந்து எரிபொருள் திருடப்படுவதாக தெரியவந்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 03 இல் வாகனம் நிறுத்திய பின்னர் காரில் இருந்து பெட்ரோல் திருடப்பட்டதால் பாதிக்கப்பட்டவர் ஒருவர் பேஸ்புக் மூலம் பதிவொன்றை பதிவிட்டு எச்சரித்துள்ளார்.

“நாங்கள் முதலில் நாவல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முழு தொட்டியையும் நிரப்பினோம். பின்னர் 5 ஆம் திகதி சாப்பிடுவதற்காக கடைக்கு சென்றோம்.

நிறுத்துமிடத்தில் வாகனங்கள் நிரம்பியதால் பாதைக்கு அருகில் உள்ள வீதியில் நிறுத்தினோம். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, நாங்கள் வாகனத்திற்கு திரும்பினோம்,

கடுமையான பெட்ரோல் வாசனை இருப்பதைக் கவனித்தோம். உள்ளே நுழைந்து காரை ஓட்ட ஆரம்பித்த போது எரிபொருள் மீட்டர் கிட்டத்தட்ட வெறுமையாக இருந்தது.

நாங்கள் காரின் வெளியே சோதனை செய்தோம், ஒரு கத்தி மற்றும் பெட்ரோல் வடித்த தடங்கள் காணப்பட்டது.

நாங்கள் காரை வேறொரு எரிபொருள் நிலையத்திற்கு கொண்டு சென்றோம், அங்கு சரிபார்த்ததில், எரிபொருள் குழாய் அடியில் இருந்து பெட்ரோல் வெளியேற்றப்பட்டதை கவனித்தோம்.

இதுபோன்ற பல சம்பவங்கள் வெளிப்படையாகவே நடந்துள்ளதென வாகனத்தை சரிப்பாத்தவர் தெரிவித்துள்ளார்.

எனவே வாகனத்தை நிறுத்தும் போது கவனமாக இருங்கள். வாகனம் பாதுகாப்பாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம், ஆனால் அவ்வாறான பாதுகாப்புகள் இல்லை” என பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 82
செய்திகள்உலகம்

செல்லப் பிராணிக்காக வேலையைத் துறந்து சட்டம் பயின்ற சீனப் பெண்!

சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த லீ யிஹான் (Li Yihan) என்ற பெண், விஷம் கலந்த...

Untitled 81
செய்திகள்இலங்கை

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை போராட்டம்: பெட்ரோல், டீசல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு!

பல்வேறு தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை (ஏப்ரல் 06,...

Untitled 80
உலகம்செய்திகள்

பிடிபட்ட அமெரிக்க விமானி குறித்து ஈரான் நெகிழ்ச்சி அறிக்கை: “கைதி அல்ல, எமது நாட்டின் விருந்தினர்!”

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க விமானி...

Untitled 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் அதிரடி: நவீன ஸ்கேனருடன் புதையல் தோண்டிய இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட...