24 660b9df31a0bc
இலங்கைசெய்திகள்

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான கப்பலில் இலங்கையர்

Share

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான கப்பலில் இலங்கையர்

அமெரிக்க பால்டிமோர் (Baltimore ) பால விபத்தில் சிக்கிய கப்பலில் உள்ள ஊழியர்களில் இலங்கையர் ஒருவரும் இருப்பதாக பணியாளர்களின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கப்பல் குறித்த இடத்திலேயே உள்ள நிலையில் அதன் 21 பணியாளர்களும் கப்பலிலேயே இருக்கிறார்கள் என அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அவர்களுள் இருபது பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் இலங்கையைச் சேர்ந்தவர் எனவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது கப்பலை பராமரிப்பதிலும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை மற்றும் அமெரிக்க கடலோர புலனாய்வாளர்களுடன் ஒத்துழைப்பதிலும் குறித்த இலங்கையர் மும்முரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பால்டிமோர் பாலப் பகுதியில் இருந்து குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள கப்பல்களுக்கான தற்காலிக, மாற்று வழியை அமெரிக்க கடலோர பொலிஸார் திறந்துள்ளனர்.

கடந்த வாரம் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஆறு தொழிலாளர்கள் இந்த விபத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...