5 19
இலங்கைசெய்திகள்

ஜேவிபியின் வீரர்களுக்கு நீதி வேண்டும்: ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Share

ஜேவிபியின் வீரர்களுக்கு நீதி வேண்டும்: ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஜேவிபியின் ஸ்தாபகர் ரோஹண விஜேவீர உட்பட உயிரிழந்த மக்கள் விடுதலை முன்னணி வீரர்களின் உயிரிழப்புக்களுக்கு நீதி வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் முன்னிலை சோசலிசக் கட்சி எழுத்து மூலம் வலியுறுத்தியுள்ளது. .

1988 – 1989 காலப்பகுதியில் அரச அங்கீகாரம் பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் உடனடி விசாரணையை ஆரம்பித்து அதற்கான தீர்வுகளையும் பெற்றுதரவேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவம்பர் 13ஆம் திகதி அனுஸ்டிக்கப்படும், 35 ஆவது “இல்மஹா விரு சமருவ” என்ற உயிர்நீத்த ஜேவிபியினரின் நினைவேந்தல் தொடர்பில், ரோஹன விஜேவீர உள்ளிட்டோரை கௌரவித்து ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடத்தல்கள், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகளுக்குப் பின்னால் இருந்தது “அரச பயங்கரவாதம்” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் 1988-1989 தென்னிலங்கை எழுச்சிகளுடன் மட்டுப்படுத்தப்படவில்லை, வடக்குகிழக்கின் உள்நாட்டு மோதலின் போதும் இது பரவியிருந்தது. என்று முன்னிலை சோசலிக்கட்சி கூறியுள்ளது.

முன்னைய நிர்வாகங்களால் இந்த கோரிக்கைகளுக்கு உண்மையான நீதியை கிடைக்கப்பெறவில்லை.

இந்தநிலையில்,ரோஹன விஜேவீர உட்பட மரணங்கள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பான நிகழ்வுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் வகையில் விரிவான விசாரணைக்கு முன்னுரிமை அளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...