20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பன்றிகள் மத்தியில் வேகமாக பரவும் நோய்த்தொற்று

Share

இலங்கையில் பன்றிகள் மத்தியில் வேகமாக பரவும் நோய்த்தொற்று

இலங்கையில் பன்றிகள் மத்தியில் பரவி வரும் PRRS(Porcine Reproductive and Respiratory Syndrome) எனப்படும் தொற்றுநோயின் தாக்கமானது, கட்டுப்பாட்டை மீறி நாடளாவிய ரீதியில் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தகவலறிந்த ஆதாரங்களின்படி, இதுவரை 2000 பன்றிகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

அநுராதபுரம் மத்திய நுவரகம் மாகாண பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட உளுக்குளம் பகுதியில் கண்டறியப்பட்ட குறித்த வைரஸ் தாக்கம் தற்போது அநேகமான பகுதிகளுக்கு பறவியுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த அடையாளம் தெரியாத வைரஸ் தொற்றுக்குள்ளாகி இரண்டு நாட்களில் பன்றிகளை கொன்றுவிடும் என்றும் கூறப்படுகிறது.

நிலைமை குறித்து கருத்து தெரிவித்த வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் சுகாதார பணிப்பாளர் வைத்தியர் தாரக பிரசாத்,

“இந்த நோய் பல பகுதிகளில் பரவி வருகிறது. ஆரம்பத்தில் காட்டுப்பன்றிகளை தாக்கிய இந்நோய் தற்போது பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கும் பரவியுள்ளது.

எனவே, நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

நோய்வாய்ப்பட்ட பன்றிகளின் இறைச்சியை உட்கொள்வதால் இந்த நோய் மனிதர்களை பாதிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

எவ்வாறாயினும், இந்த பிரச்சினை பண்ணைகளில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

இதேவேளை, அநுராதபுரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்றுக்கு உள்ளான பன்றிகள் சுமார் இரண்டு நாட்களில் உயிரிழந்துள்ளதாகவும் அது வேகமாக பரவி வருவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

இந்த பிரிவில் உள்ள சுமார் 20 பண்ணைகளில் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு பண்ணையில் மாத்திரம் 200 க்கும் மேற்பட்ட பன்றிகளை இறந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது” என்றார்.

இந்நிலையில் குறித்த தொற்றுக்கான தீர்வுகளை வழங்க கால்நடை வைத்தியர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பண்ணை விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பன்றிகள் அதிக அளவில் உயிரிழப்பதால், சில பண்ணைகளில் பாரிய இழப்பீடு ஏற்ப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...