27 13
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தை மீண்டும் கையில் எடுக்கும் ரணில்

Share

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தை மீண்டும் கையில் எடுக்கும் ரணில்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட இரண்டு குழுக்கள் குறித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று (23.10.2024) விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட தகவலை தொடர்ந்து விக்கிரமசிங்க அறிக்கையொன்றை முன்வைக்க தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்புக்களை கோடிட்டு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக புதிய விசாரணைகளை ஆரம்பிப்பதற்காக, தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகிய இரண்டு அதிகாரிகளை நியமித்துள்ளார்.

குறித்த அதிகாரிகள் இருவரும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்த முன்னறிவிப்புகளை புறக்கணித்தமைக்கு பொறுப்பானவர்கள் என கம்மன்பில குற்றம் சுமத்தியிருந்தார்.

எனினும், சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்னவுக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக ஓய்வுபெற்ற நீதிபதி ஜானகி அல்விஸ் தலைமையிலான இந்த குழுவை, இந்த வருட ஆரம்பத்தில் ரணில் விக்ரமசிங்க நியமித்தது சந்தேகத்திற்குரியதாக இருப்பதாக, கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...