27 13
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தை மீண்டும் கையில் எடுக்கும் ரணில்

Share

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தை மீண்டும் கையில் எடுக்கும் ரணில்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட இரண்டு குழுக்கள் குறித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று (23.10.2024) விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட தகவலை தொடர்ந்து விக்கிரமசிங்க அறிக்கையொன்றை முன்வைக்க தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்புக்களை கோடிட்டு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக புதிய விசாரணைகளை ஆரம்பிப்பதற்காக, தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகிய இரண்டு அதிகாரிகளை நியமித்துள்ளார்.

குறித்த அதிகாரிகள் இருவரும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்த முன்னறிவிப்புகளை புறக்கணித்தமைக்கு பொறுப்பானவர்கள் என கம்மன்பில குற்றம் சுமத்தியிருந்தார்.

எனினும், சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்னவுக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக ஓய்வுபெற்ற நீதிபதி ஜானகி அல்விஸ் தலைமையிலான இந்த குழுவை, இந்த வருட ஆரம்பத்தில் ரணில் விக்ரமசிங்க நியமித்தது சந்தேகத்திற்குரியதாக இருப்பதாக, கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...