28 6
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் சுற்றிவளைப்பில் சிக்கிய 17 வயது சிறுவன்

Share

தமிழர் பகுதியில் சுற்றிவளைப்பில் சிக்கிய 17 வயது சிறுவன்

மட்டக்களப்பில்(Batticaloa) ஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் 17 வயதுடைய சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை நேற்று(06.12.2024) இடம்பெற்றுள்ளது.

கல்லடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து கொக்குவில் காவல்துறை பிரிவிலுள்ள காந்திநகர் பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, போதை பொருட்களை தனது உடமையில் மறைத்து வைத்திருந்த 17 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சிறுவனிடம் இருந்து 10 கிராம் 950 மில்லிக்கிராம் ஹரோயின் போதை பொருளும் பொதி செய்யப்பட்ட 650 மில்லிக்கிராம் கொண்ட 5 பக்கற் கேரளா கஞ்சாவும், 7 கிராம் 200 மில்லிக்கிராம் கேரளாககஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட சிறுவன் கொக்குவில் காவல்துறையினரிடம் சான்று பொருட்களுடன் ஒப்படைக்கப்பட்டதாகவும் சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...