இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் சுற்றிவளைப்பில் சிக்கிய 17 வயது சிறுவன்

Share
28 6
Share

தமிழர் பகுதியில் சுற்றிவளைப்பில் சிக்கிய 17 வயது சிறுவன்

மட்டக்களப்பில்(Batticaloa) ஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் 17 வயதுடைய சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை நேற்று(06.12.2024) இடம்பெற்றுள்ளது.

கல்லடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து கொக்குவில் காவல்துறை பிரிவிலுள்ள காந்திநகர் பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, போதை பொருட்களை தனது உடமையில் மறைத்து வைத்திருந்த 17 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சிறுவனிடம் இருந்து 10 கிராம் 950 மில்லிக்கிராம் ஹரோயின் போதை பொருளும் பொதி செய்யப்பட்ட 650 மில்லிக்கிராம் கொண்ட 5 பக்கற் கேரளா கஞ்சாவும், 7 கிராம் 200 மில்லிக்கிராம் கேரளாககஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட சிறுவன் கொக்குவில் காவல்துறையினரிடம் சான்று பொருட்களுடன் ஒப்படைக்கப்பட்டதாகவும் சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...