IMG 20241128 WA0026
இலங்கைசெய்திகள்

வெளிவந்தது ரசிகர்கள் மனம் கவர்ந்த 96 படத்தின் 2 பார்ட் அப்டேட்.. என்ன தெரியுமா

Share

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா இவருடைய திரை வாழ்க்கையிலும் முக்கியமான திரைப்படம் ’96. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் பிரேம் குமார்.

இப்படம் 2018 – ம் ஆண்டு வெளிவந்து இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. இப்படத்தில் வந்த ரீயூனியன் காட்சி, பள்ளி பருவ காட்சி, த்ரிஷா மற்றும் விஜய் சேதுபதிக்கு இடையிலான பேச்சுவார்த்தை என பல்வேறு விஷயங்கள் ரசிக்க வைத்தது.

இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால், தமிழில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்ற மொழிகளில் கிடைக்கவில்லை.

96 படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரேம் இயக்கிய திரைப்படம் மெய்யழகன். இப்படம் சமீபத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரேம் குமார் இயக்க போகும் அடுத்த படத்தின் அப்டேட் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, அடுத்து பிரேம் 96 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளாராம்.

இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியானது. மீண்டும், விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இப்படத்தில் நடிக்க உள்ளாராம்.

மேலும், இப்படத்திற்கு கோவிந்த் வஸந்தா இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...