4 16
இலங்கைசெய்திகள்

இலங்கைக் கடற்படையினரின் விசேட தேடுதல் நடவடிக்கை! எட்டு இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

Share

இலங்கைக் கடற்படையினர், இன்று அதிகாலை மன்னாருக்கு வடக்கே இலங்கைக் கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 8 இந்திய கடற்றொழிலாளர்களை இந்திய மீன்பிடிப் படகு ஒன்றுடன் கைது செய்துள்ளனர்.

நாட்டின் கடற்பரப்பை மீறி வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கவும், உள்ளூர் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதன்படி, இன்று வடமத்திய கடற்படை கட்டளை மன்னாருக்கு வடக்கே இலங்கைக் கடற்பரப்பில் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் பலவற்றை அவதானித்ததோடு, அந்த மீன்பிடிப் படகுகளை இலங்கையில் இருந்து அகற்றும் விசேட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.இலங்கை உணவகம்

அங்கு இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த இந்திய மீன்பிடிப் படகு ஒன்று இலங்கைக் கடற்படையினரால் முறையாகச் சோதனை செய்யப்பட்டதுடன், எல்லை விதிகளை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 8 இந்திய கடற்றொழிலாளர்களை அந்த மீன்பிடி படகுடன் இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.

இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரிடம் சிக்கிய இந்திய மீன்பிடி படகும், அதில் இருந்த 8 இந்திய மீனவர்களும் தலைமன்னார் இறங்குத்துறைக்குக் கொண்டு வரப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
IMG 20260123 WA0115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டட்லி சிறிசேனவின் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ரூ. 700 இலட்சம் அபராதம்! உண்மைகளை மறைத்ததாகச் சுங்கத்துறை நடவடிக்கை!

பிரபல தொழிலதிபர் டட்லி சிறிசேன இறக்குமதி செய்த அதிநவீன ‘ரோல்ஸ் ராய்ஸ்’ (Rolls-Royce) காருக்கு, இலங்கைச்...

images 2 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் மாவட்டத்தில் ரூபாய் 50,000 கொடுப்பனவு 98% வழங்கப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் 99% பயனாளிகளுக்கும், குருநாகல் மாவட்டத்தில் 91% வீதமானவர்களுக்கும், அநுராதபுர மாவட்டத்தில் 84% பயனாளிகளுக்கும்,...

images 1 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சூறாவளி நிவாரணம்: பதுளை மக்களுக்குச் சிகிச்சையளிக்க கேரளாவிலிருந்து வந்த சிறப்பு மருத்துவக் குழு!

‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டு பதுளை மாவட்டத்தில் உள்ள “சுரக்சா” முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய...

22 624c54ac70b92
உலகம்செய்திகள்

இந்த ஆண்டு $1.5 பில்லியன் டொலர் முதலீட்டை இலக்கு வைக்கும் இலங்கை! கடந்த ஆண்டின் சாதனையை முறியடிக்குமா?

இந்த ஆண்டு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்கான இலங்கை இலங்கை...