tamilni 371 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் பொலிஸாரிடம் சிக்கிய நூற்றுக்கணக்கானோர்

Share

கொழும்பில் பொலிஸாரிடம் சிக்கிய நூற்றுக்கணக்கானோர்

கொழும்பில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 793 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரை கண்காணிக்க கொழும்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்ட சீசீரிவி கமராக்கள் மூலம் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரை விதிமீறலில் ஈடுபட்ட 793 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சுமார் 300 பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

குடிபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் கடந்த வருடம் 26,000 வழக்குகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...