7 40
இலங்கைசெய்திகள்

கடந்த ஆண்டில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 77 அரசாங்க ஊழியர்கள் கைது

Share

கடந்த ஆண்டில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 77 அரசாங்க ஊழியர்கள் கைது

கடந்த 2024ஆம் ஆண்டில் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் கீழ் 77 அரசாங்க ஊழியர்கள் இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்ட அரச ஊழியர்களில் ஆகக்கூடுதலானவர்கள் பொலிஸார் என்று தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு 22 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.​

மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஊழியர்கள் ஆறு பேரும் இந்தக் காலப்பகுதியில் இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதற்கு அடுத்ததாக நீதிமன்ற ஊழியர்கள் ஐந்து பேர் இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் கீ்ழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே ​போன்று கிராம அலுவலர்கள் மூன்று பேர், பாடசாலை அதிபர்கள் மூன்று பேர் உள்ளடங்கலாக கடந்த ஆண்டில் மொத்தமாக 77 அரச ஊழியர்கள் இலஞ்சம் பெற்றுக் கொண்ட சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...