இலங்கைசெய்திகள்

கடந்த ஆண்டில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 77 அரசாங்க ஊழியர்கள் கைது

Share
7 40
Share

கடந்த ஆண்டில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 77 அரசாங்க ஊழியர்கள் கைது

கடந்த 2024ஆம் ஆண்டில் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் கீழ் 77 அரசாங்க ஊழியர்கள் இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்ட அரச ஊழியர்களில் ஆகக்கூடுதலானவர்கள் பொலிஸார் என்று தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு 22 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.​

மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஊழியர்கள் ஆறு பேரும் இந்தக் காலப்பகுதியில் இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதற்கு அடுத்ததாக நீதிமன்ற ஊழியர்கள் ஐந்து பேர் இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டின் கீ்ழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே ​போன்று கிராம அலுவலர்கள் மூன்று பேர், பாடசாலை அதிபர்கள் மூன்று பேர் உள்ளடங்கலாக கடந்த ஆண்டில் மொத்தமாக 77 அரச ஊழியர்கள் இலஞ்சம் பெற்றுக் கொண்ட சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...