tamilni 315 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பிரபுகளின் பாதுகாப்புக்காக பெருந்தொகை பொலிஸார்

Share

இலங்கையில் பிரபுகளின் பாதுகாப்புக்காக பெருந்தொகை பொலிஸார்

நாட்டின் பிரபுகளின் பாதுகாப்பிற்காக 7693 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமாரவின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில் 563 பேர் அமைச்சர்களுக்கும், 1811 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காகவும் பணியில் ஈடுபடுகின்றனர்.

மேலும், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத உயரதிகாரிகளுக்காக 2176 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர்குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகள், முன்னாள் பிரதி அமைச்சர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், ஆளுநர்கள், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர், ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப் பல பிரிவுகள் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத உயரடுக்கு பிரிவைச் சேர்ந்தவர்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சரின் தகவலுக்கமைய, பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை தற்போது 10085 ஆகும், அதில் 5810 பொலிஸ் கான்ஸ்டபிள்கள். 4 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் 5 மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...