14 15
இலங்கைசெய்திகள்

74 வருட ஆட்சியாளர்கள் நாட்டை நாசமாக்கவில்லை : குற்றச்சாட்டை மறுக்கும் மைத்திரி

Share

74 வருட ஆட்சியாளர்கள் நாட்டை நாசமாக்கவில்லை : குற்றச்சாட்டை மறுக்கும் மைத்திரி

கடந்த 74 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்தவர்கள் நாட்டை நாசப்படுத்தியதாக கூறுவதை தாம் ஏற்கவில்லை என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தின் 45ஆவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், சுதந்திரத்தின் பின்னர் ஆட்சிக்கு வந்த தலைவர்கள் ஊழல், மோசடிகள் தொடர்பான எந்தவொரு விடயத்திலும் ஈடுபடவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தில் எத்தனை நல்ல ஏற்பாடுகள் இருந்தாலும், ஊழல் மோசடிகளைத் தடுக்க நாடாளுமன்றத்தில் எத்தனை விதிகள் நிறைவேற்றப்பட்டாலும், உயர் பதவிகளில் அமர்த்தப்படுபவர்கள் இந்தச் சட்டங்களைப் புறக்கணித்து ஊழல், மோசடிகளில் ஈடுபடும் நிலை உள்ளது.

இந்தநிலையில்;, தனது ஆட்சிக் காலத்தில் எந்தவிதமான மோசடி, ஊழல் சம்பவங்கள் நடக்கவிடவில்லை என்று மைத்திரிபால குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சியாளர் நல்லவராக இருக்கும் வரை ஒரு நாடு எப்போதும் வளர்ச்சியடையும். எனவே ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் ஊழல் மற்றும் மோசடிகளில் இருந்து விடுபட வேண்டும்.

நாடாளுமன்றத்தில் எந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும், அதிகாரப் பதவிகளில் அமர்த்தப்படுபவர்கள் மத்தியில், நாட்டின் சொத்துக்களை திருடவோ, அழிக்கவோ, கொள்ளையடிக்கவோ கூடாது என்ற உண்மையான எண்ணம் இருக்க வேண்டும்.

பின்னர் இந்த எண்ணம் ஆட்சியாளர்களிடம் இருந்து நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கொண்டு வரப்பட வேண்டும்.

தற்போதைய நிலையில், தேர்தல் பிரசாரத்தின் போது சாராயம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது.

பிரசாரத்திற்கு நல்ல பேருந்துகள் மற்றும் நல்ல மதிய உணவு பொட்டலங்கள் தேவை. அதுவும் ஊழல் என்ற வகுதிக்குள்ளேயே அடங்கும் என்று மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...