2 3
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட ஏழு பேர் கைது!

Share

முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட ஏழு கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்று(4) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு, கடற்றொழிலாளர்களின் 7 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு கடலில் சட்டவிரோதமான முறையில் ஒளிப்பாச்சி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 6 கடற்றொழிலாளர்கள் படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்த சட்டவிரோத தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை தடுத்து கைது செய்த நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு படகு உரிமையாளர்களான முல்லைத்தீவு கடற்தொழிலாளர்களையும் பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.

இதனை விட கொக்குளாய் கடற்பரப்பில் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களமும் மீனவ சங்கமும் இணைந்து நடத்திய சோதனையின் போது ஒரு படகுடன் இருவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்களை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களம் ஈடுபட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை நிறுத்த கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை முன்வைத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
62a15150 5261 11f0 a2ff 17a82c2e8bc4.jpg
செய்திகள்உலகம்

வரலாறு படைத்த ஜோஹ்ரான் மம்தானி: நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இளம் மேயராகத் தேர்வு!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு...

11ad0a96d3aaa13d73a54e4883f2f59c
உலகம்செய்திகள்

கென்டகி விமான நிலையத்தில் கோர விபத்து: சரக்கு விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்தது – 3 பேர் பலி!

அமெரிக்காவின் கென்டகி மாகாணம், லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு...

23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...