இலங்கைசெய்திகள்

சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல்

23 2
Share

சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல்

சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 637 வாகனங்கள் பல வருடங்களாக கொழும்பு மற்றும் ருஹுனுபுர துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளதால் பழுதடைந்து வருவதாக தெரியவந்துள்ளது.

இவற்றில் 188 வாகனங்கள் ஐந்து வருடங்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவற்றில் 435 வாகனங்கள் தனியார் நிறுவனத்திடம் இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட மட்டக்குளி காணியிலும், ஏனைய 202 வாகனங்கள் ருஹுணுபுர துறைமுகத்திலும் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த காணிக்கு ஆண்டுக்கு நான்கு கோடியே பதினெட்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வாடகை வாங்குவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வாகனங்கள் ஓட்டிச்செல்வதற்கு தகுதியற்றதாக மாறியுள்ளதாகவும், வாகனங்களை ஏலம் விடுவதன் மூலம் நியாயமான தொகையை ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கின்றது.

இவற்றில் பெரும்பாலான வாகனங்களுக்கான சோதனைகள் இன்னும் நிறைவடையவில்லை என சுங்கத் திணைக்களம் கணக்காய்வு அலுவலகத்திற்கு அறிவித்துள்ளதுடன், வாகனங்கள் குறித்து உரிய நடவடிக்கையை விரைவில் எடுக்குமாறு பரிந்துரை செய்துள்ளது.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...