9 20
இலங்கைசெய்திகள்

2025 முதல் பாடசாலை மாணவர்களுக்கு கிடைக்கப் போகும் கொடுப்பனவு

Share

2025 முதல் பாடசாலை மாணவர்களுக்கு கிடைக்கப் போகும் கொடுப்பனவு

அடுத்த 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, பொருளாதாரச் சிரமங்களைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு 6000 ரூபா கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பொருளாதார நெருக்கடியின் போது, 55% க்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் மிகவும் பாதகமான பொருளாதார சிரமங்களுக்கு ஆளாகியுள்ளதாகவும், கிராமப்புற மற்றும் பெருந்தோட்டப் பாடசாலைகளில் இந்த நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர்களில் 53% க்கும் அதிகமான மாணவர்கள் பாடசாலை எழுதுபொருட்களை வாங்குவதைக் குறைத்துள்ளதாகவும் 26% க்கும் அதிகமானோர் ஏற்கனவே பயன்படுத்திய எழுதுபொருட்களை மீண்டும் பயன்படுத்துவதை நாடியுள்ளனர் என்று மக்கள் தொகை மற்றும் புள்ளி விபர திணைக்களித்தின் ஆய்வு அறிக்கைகள் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பொருளாதாரச் சிக்கல்களால் மாணவர்களில் கல்வியில் ஏற்படும் எதிர்மறையான தாக்கத்தை குறைக்கும் வகையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்த கொடுப்பனவை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இந்த கொடுப்பனவை பெற 5 முதல் 18 வயதுக்குட்பட்ட ஒரு இலட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தகுதியுடையவர்கள் எனவும், அதற்கான 6500 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு இடைக்கால வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரை புத்தாண்டு பாதுகாப்பு: நாடு முழுவதும் 10,000 பொலிஸார் விசேட கடமையில்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டுப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நாடு தழுவிய ரீதியில் விசேட...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் விநியோகம் உறுதி: பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

இலங்கைக்குத் தேவையான எரிபொருளை ரஷ்யாவிடமிருந்து பெற்றுக்கொள்வது தற்போது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்...

Untitled 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொச்சிக்கடையில் சட்டவிரோத டீசல் கையிருப்பு: 35 வயதுடைய நபர் கைது!

கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள கொச்சிக்கடை, தலுவகொட்டுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் டீசலை வைத்திருந்த 35...

Untitled 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் போதைப்பொருள் வர்த்தகத்தை இயக்கும் 5 முக்கிய சூத்திரதாரிகள்: டுபாய் மற்றும் ஐரோப்பாவிலிருந்து செயற்படுவது அம்பலம்!

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட போதிலும், நாட்டின் ஒட்டுமொத்த போதைப்பொருள்...