9 20
இலங்கைசெய்திகள்

2025 முதல் பாடசாலை மாணவர்களுக்கு கிடைக்கப் போகும் கொடுப்பனவு

Share

2025 முதல் பாடசாலை மாணவர்களுக்கு கிடைக்கப் போகும் கொடுப்பனவு

அடுத்த 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, பொருளாதாரச் சிரமங்களைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு 6000 ரூபா கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பொருளாதார நெருக்கடியின் போது, 55% க்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் மிகவும் பாதகமான பொருளாதார சிரமங்களுக்கு ஆளாகியுள்ளதாகவும், கிராமப்புற மற்றும் பெருந்தோட்டப் பாடசாலைகளில் இந்த நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர்களில் 53% க்கும் அதிகமான மாணவர்கள் பாடசாலை எழுதுபொருட்களை வாங்குவதைக் குறைத்துள்ளதாகவும் 26% க்கும் அதிகமானோர் ஏற்கனவே பயன்படுத்திய எழுதுபொருட்களை மீண்டும் பயன்படுத்துவதை நாடியுள்ளனர் என்று மக்கள் தொகை மற்றும் புள்ளி விபர திணைக்களித்தின் ஆய்வு அறிக்கைகள் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பொருளாதாரச் சிக்கல்களால் மாணவர்களில் கல்வியில் ஏற்படும் எதிர்மறையான தாக்கத்தை குறைக்கும் வகையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்த கொடுப்பனவை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இந்த கொடுப்பனவை பெற 5 முதல் 18 வயதுக்குட்பட்ட ஒரு இலட்சத்து இருபத்தி ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தகுதியுடையவர்கள் எனவும், அதற்கான 6500 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு இடைக்கால வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...