13 4
இலங்கைசெய்திகள்

அநுரவின் வலையில் சிக்கிய முன்னாள் அமைச்சர்கள் : கைது செய்யப்படவுள்ள பல அரசியல்வாதிகள்

Share

கடந்த அரசாங்கங்களில் அமைச்சர் பதவிகளை வகித்த ஆறு மூத்த அரசியல்வாதிகளுக்கு எதிரான ஊழல் மற்றும் பிற குற்றவியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக அரச உயர் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விசாரணைகள் தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணையம், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பணியகம் ஆகியவை விசாரணைகளை முன்னெடுத்தன.

அதற்கமைய, எதிர்வரும் வாரங்களில் இந்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குருணால், மற்றும் கண்டி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் அமைச்சர்கள் இருவரும், களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் அமைச்சர்கள் இருவரும் இந்த பட்டியலில் உள்ளடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர்களில் சிலர் விரைவில் கைது செய்யப்பட உள்ளனர் என சட்டத் துறையின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...