20 15
இலங்கைசெய்திகள்

ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்ட சட்டவிரோத தேர்தல் சுவரொட்டிகள் நீக்கம்: பொலிஸாரின் நடவடிக்கை

Share

ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்ட சட்டவிரோத தேர்தல் சுவரொட்டிகள் நீக்கம்: பொலிஸாரின் நடவடிக்கை

ஜனாதிபதி தேர்தல் குறித்து சட்டவிரோதமான வகையில் ஒட்டப்பட்டிருந்த சுமார் 627,300 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அத்துடன், 7,900 சுவரொட்டிகள் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, 1,500 பதாகைகள் அகற்றப்பட்டுள்ளதுடன் 1,100 பதாகைகள் பொலிஸார் கைப்பற்றி வைத்துள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மொத்தம் 1,550 விளம்பர பதாகைகள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளதுடன் அவற்றில் 1,600 விளம்பர பதாகைகள் பொலிஸ் பாதுகாப்பில் உள்ளன.

அதுமாத்திரமன்றி, 7,600 விளம்பரங்கள் மற்றும் துண்டுபிரசுரங்கள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ள நிலையில் 10,750 விளம்பரங்கள் மற்றும் துண்டுபிரசுரங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், கடந்த ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி முதல் நேற்று (16) வரையான காலப்பகுதிக்குள் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...