24 6614a07747688
இலங்கைசெய்திகள்

இலங்கையில் தொழில்களை இழந்துள்ள ஒன்பது இலட்சம் பேர்

Share

இலங்கையில் தொழில்களை இழந்துள்ள ஒன்பது இலட்சம் பேர்

இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிற்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக ஒன்பது இலட்சம் பேர் தொழில்களை இழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

வறுமை காரணமாக சுமார் ஐந்து இலட்சம் சிறுவர், சிறுமியர் பாடசாலை கல்வியிலிருந்து இடை விலகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சிறுவர் மந்த மந்த போசனை 27 வீதம் வரையில் உயர்வடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய வங்கி அறிக்கையின் அடிப்படையில் நாட்டின் மொத்த சனத்தொகையில் 57 இலட்சம் பேர் வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் எவ்வித கரிசனையும் காட்டவில்லை என அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.

அரசாங்க அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் நெருக்கடி நிலைமையை கிண்டல் செய்யும் வகையில் கருத்து வெளியிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தை மக்கள் நிறுவவில்லை எனவும் செயற்கையாக உருவாக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நடாத்துவது குறித்து ஜனாதிபதியோ அல்லது ஜனாதிபதி செயலகமோ கருத்து வெளியிட முடியாது என ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தேர்தல் குறித்த அறிவிப்புக்களை வெளியிடும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கே உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ம் திகதிக்கும் ஒக்ரோபர் மாதம் 17ம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...