24 6614a07747688
இலங்கைசெய்திகள்

இலங்கையில் தொழில்களை இழந்துள்ள ஒன்பது இலட்சம் பேர்

Share

இலங்கையில் தொழில்களை இழந்துள்ள ஒன்பது இலட்சம் பேர்

இலங்கையில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிற்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக ஒன்பது இலட்சம் பேர் தொழில்களை இழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

வறுமை காரணமாக சுமார் ஐந்து இலட்சம் சிறுவர், சிறுமியர் பாடசாலை கல்வியிலிருந்து இடை விலகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சிறுவர் மந்த மந்த போசனை 27 வீதம் வரையில் உயர்வடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய வங்கி அறிக்கையின் அடிப்படையில் நாட்டின் மொத்த சனத்தொகையில் 57 இலட்சம் பேர் வறுமையில் வாடுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் எவ்வித கரிசனையும் காட்டவில்லை என அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.

அரசாங்க அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் நெருக்கடி நிலைமையை கிண்டல் செய்யும் வகையில் கருத்து வெளியிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தை மக்கள் நிறுவவில்லை எனவும் செயற்கையாக உருவாக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நடாத்துவது குறித்து ஜனாதிபதியோ அல்லது ஜனாதிபதி செயலகமோ கருத்து வெளியிட முடியாது என ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தேர்தல் குறித்த அறிவிப்புக்களை வெளியிடும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கே உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ம் திகதிக்கும் ஒக்ரோபர் மாதம் 17ம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F0Nj1D1mrgD3fUv0MNcTa
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல்கலைக்கழக சட்டத்தில் மாற்றம்: துறைத் தலைவர்களை நீக்கும் அதிகாரம் பேரவைக்கு! அதிபர் சேவை ஆட்சேர்ப்பிலும் விரிவான ஆய்வு.

பல்கலைக்கழகங்களின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் இலங்கை அதிபர் சேவையில் நிலவும் ஆட்சேர்ப்பு சிக்கல்கள் குறித்து, கல்வி...

NASA
செய்திகள்உலகம்

நிலவுக்கு உங்கள் பெயரை அனுப்ப ஓர் அரிய வாய்ப்பு: நாசாவின் புதிய திட்டத்தில் நீங்களும் இணையலாம்!

விண்வெளி ஆய்வில் ஆர்வமுள்ள பொதுமக்களின் பெயர்களை நிலவுக்கு அனுப்பும் #SendYourName எனும் உற்சாகமான திட்டத்தை அமெரிக்க...

1747723536 25 6828c2adaf2b1
செய்திகள்இலங்கை

ரயில்வே சேவையில் நெருக்கடி: கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 23 முதல் தொழிற்சங்க நடவடிக்கை!

நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள நிர்வாகச் சிக்கல்களை முன்வைத்து, எதிர்வரும் ஜனவரி 23-ஆம் திகதிக்குப் பின்னர் நாடு...

1731919585 Ravi L
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கம் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியாது: ஐ.தே.க – ஐ.ம.ச கூட்டணி குறித்து ரவி கருணாநாயக்க முக்கிய தகவல்!

மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்தத் தவறினால், அது அரசாங்கத்தின் எதிர்காலப் பயணத்திற்குச் சிறந்ததல்ல எனப்...