24 6619e3d56b893
இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ரணிலின் அறிவிப்பு

Share

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ரணிலின் அறிவிப்பு

வீடற்ற மக்களுக்கு 50,000க்கும் மேற்பட்ட வீடுகள் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கல்வி, காணி, வீடமைப்பு மற்றும் வர்த்தக உரிமைகளை மக்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களை வலுவான பொருளாதாரத்தின் அங்கமாக மாற்றுவதற்கு அவர்கள் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மோதர மற்றும் ரந்திய உயன அடுக்குமாடி குடியிருப்புகளை கையளிக்கும் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

2010ஆம் ஆண்டு காஜிமா தோட்டத்தில் எரிக்கப்பட்ட வீடுகளுக்காக 2010ஆம் ஆண்டு ரந்திய உயன வீட்டுத் தொகுதியிலுள்ள 294 வீடுகள் ஜனாதிபதி தலைமையில் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்காக 12,855 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், இதற்கு முன்னர் இலவச காணி அல்லது வீட்டு உரிமைகள் வழங்கப்படவில்லை.

இந்த வீடுகளில் மாதாந்த வாடகையாக 4,500 ரூபா அறவிடப்படாமல் மக்களுக்கு இலவச உரிமை வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

அத்துடன், தான் பிரதமராக இருந்த போது சீன அரசாங்கம் வழங்கிய 1,996 வீடுகள் அடுத்த இரண்டு வருடங்களில் மக்களுக்கு வழங்கப்படும் எனவும் மக்களை பொருளாதாரத்தில் அங்கம் வகிப்பதன் மூலம் உடைக்க முடியாத பரந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...