23 5
இலங்கைசெய்திகள்

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவு: வெளியான அறிக்கை

Share

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவு: வெளியான அறிக்கை

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்காக சமுர்த்தி வங்கியிலிருந்து வழங்கப்பட்ட 3241 கோடி ரூபாய் பணத்தினை மூன்று ஆண்டுகள் கடந்தும் அந்த வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

2020 ஆம் ஆண்டு குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை சமுர்த்தி வங்கியினால் 11929 மாவீரர்களுக்காக வழங்கப்பட்ட 355 கோடி ரூபா கடன் தொகையில் 19 கோடி ரூபாவிற்கு மேல் இதுவரை வசூலிக்கவில்லை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேசிய மாவீரர் வீடமைப்புத் திட்டத்துக்காக சமுர்த்தி அதிகாரசபைக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் காலாவதியானதால், தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்ட போதிலும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு கோவிட் நோயினால் உயிரிழந்த சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் முறைசாரா முறையில் இரண்டு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....