16 6
இலங்கைசெய்திகள்

அடுத்த வருட தொடக்கத்திற்குள் பல மருந்தகங்கள் மூடப்பட வாய்ப்பு

Share

அடுத்த வருட தொடக்கத்திற்குள் பல மருந்தகங்கள் மூடப்பட வாய்ப்பு

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் பல மருந்தகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 5000 மருந்தகங்களின் வருடாந்த அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக்கொள்வதற்காக தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபைக்கு அனுப்பப்பட்ட பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரச வைத்தியசாலைகள் மற்றும் தனியார் மருந்தகங்களுக்கு சுமார் பத்தாயிரம் மருந்தாளர்கள் தேவைப்படுகின்ற போதிலும், தற்போது நாடளாவிய ரீதியில் ஆறாயிரம் மருந்தாளுநர்கள் மாத்திரமே உள்ளனர்.

இந்நிலையில், மருந்தக உரிமையாளர்கள் ஒரு மருந்தாளுநரிடம் பதிவுசெய்து, பயிற்சி பெற்ற மருந்தாளுநர்களுடன் சேர்ந்து மருந்தகங்கள் மூலம் தங்கள் சேவைகளை வழங்குகிறார்கள்.

இருப்பினும், தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை அவசர தீர்மானமொன்றை எடுத்து வருடாந்த உரிமம் புதுப்பித்தலின் போது மருந்தாளுநர்கள் இல்லை எனக் கூறி விண்ணப்பங்களை நிராகரிக்க ஆரம்பித்துள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டு 5ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், மருந்தாளுநர்கள் பற்றாக்குறை இருந்த போதிலும், தேவை பூர்த்தியாகும் வரை உரிமங்களை புதுப்பிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்திருந்தது.

இதற்கிடையில், மருத்துவ அதிகாரிகளால் மருந்தகங்களை ஆய்வு செய்யும் அல்லது உரிமங்களை பரிந்துரைக்கும் திட்டத்தை ஒக்டோபர் 10ஆம் திகதி தொடங்க சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற...