அநுராதபுரம்-கல்குளம் அருகே நேற்று முன்தினம் (26) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட குறித்த துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக மிஹிந்தலை, சியம்பலாகஸ்வெ வ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய வாலிபர் ஒருவர் காயமடைந்திருந்தார்.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பேரில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.