12 8
இலங்கைசெய்திகள்

இந்த ஆண்டில் இதுவரையில் 425 பெண்களுக்கு சிறைத்தண்டனை

Share

இந்த ஆண்டில் இதுவரையில் 425 பெண்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 31 வரை மொத்தம் 425 பெண்கள் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும், அதே காலப்பகுதியில் 4,686 பெண்கள் சந்தேகத்தின் பேரில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனுடன், பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக மேலும் 38 பெண்களும் இந்த ஆண்டில் சிறை தண்டனை பெற்றுள்ளனர் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

அரசு தற்போது பெண் குற்றவாளிகள் மற்றும் ரிமாண்ட் கைதிகளின் நலன், மறுசீரமைப்பு மற்றும் சட்ட உதவி நடவடிக்கைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...