12 8
இலங்கைசெய்திகள்

இந்த ஆண்டில் இதுவரையில் 425 பெண்களுக்கு சிறைத்தண்டனை

Share

இந்த ஆண்டில் இதுவரையில் 425 பெண்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 31 வரை மொத்தம் 425 பெண்கள் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும், அதே காலப்பகுதியில் 4,686 பெண்கள் சந்தேகத்தின் பேரில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனுடன், பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக மேலும் 38 பெண்களும் இந்த ஆண்டில் சிறை தண்டனை பெற்றுள்ளனர் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

அரசு தற்போது பெண் குற்றவாளிகள் மற்றும் ரிமாண்ட் கைதிகளின் நலன், மறுசீரமைப்பு மற்றும் சட்ட உதவி நடவடிக்கைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...