25 68fa79946f647
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

எலிக்காய்ச்சலால் குடும்பஸ்தர் உயிரிழப்பு – இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலி!

Share

யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் (Leptospirosis) காரணமாக 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் இன்று (19) காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அல்வாய் மேற்கு, அல்வாய் பகுதியைச் சேர்ந்த அன்னலிங்கம் அஜந்தன் (வயது 42) என்பவராவார்.

இவருக்கு கடந்த 17-ஆம் திகதி திடீரெனக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. எனினும், இன்று (19) அதிகாலை நிலைமை மோசமடைந்து அவர் இரத்த வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவர் எலிக்காய்ச்சலால் (Rat Fever) பாதிக்கப்பட்டிருந்ததாகச் சிகிச்சை அளித்த வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

தற்போது நிலவும் சீரற்ற வானிலை மற்றும் வரட்சியான காலப்பகுதிகளில் தேங்கி நிற்கும் நீர்நிலைகள் ஊடாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகம் உள்ளது. காய்ச்சல், தசைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறுமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...