1 4 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் காவல்துறையினர் மீது தாக்குதல்: நான்கு இளைஞர்கள் அதிரடியாக கைது

Share

யாழில் காவல்துறையினர் மீது தாக்குதல்: நான்கு இளைஞர்கள் அதிரடியாக கைது

யாழ்ப்பாணத்தில் (Jaffna) காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் திருகோணமலையை (Trincomalee) சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பேருந்து நிலையத்தில் நேற்று இரவு இளைஞர்கள் குழு ஒன்று அமைதியின்மையை ஏற்படுத்துவதாக யாழ்ப்பாண காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனையடுத்து, பேருந்து நிலையத்திற்கு விரைந்த காவல்துறையினர் அங்கு அமைதியின்மையை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களை கைது செய்ய முயற்சித்துள்ளனர்.

இதன்போது, இளைஞர்கள் குழு காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

தாக்குதலில் இரண்டு காவல்துறையினர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நான்கு இளைஞர்களும் காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொண்டமை, கடமைக்கு இடையூறு விளைவித்தமை, பொது இடத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள நான்கு இளைஞர்களையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...