25 17
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தல் 2024: கட்டுப்பணத்தை இழந்த 35 வேட்பாளர்கள்

Share

ஜனாதிபதி தேர்தல் 2024: கட்டுப்பணத்தை இழந்த 35 வேட்பாளர்கள்

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களைத் தவிர, ஏனைய 35 வேட்பாளர்களும் தங்களது கட்டுப்பணத்தை இழந்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாகத் தெரிவான அநுரகுமார திஸாநாயக்க, இரண்டாம் இடத்தை பெற்ற சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு மாத்திரமே கட்டுப்பணத்தை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை தேர்தலில் வரலாற்றில் அதிகளவான வேட்பாளர்கள் 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர்.

இதற்கமைய 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்திய நிலையில், அவர்களில் 39 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். ஜனாதிபதி வேட்பாளரான அஹிதுருஸ் மொஹமட் இல்யாஸின் திடீர் மரணம் காரணமாக இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலில் 38பேர் மாத்திரமே போட்டியிட்டனர்.

இதன்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஊடாக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவருக்கு 50,000 ரூபாவும், சுயேச்சை வேட்பாளர் ஒருவருக்கு 75,000 ரூபாவும் கட்டுப்பணமாக அறவிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் தேர்தலில் போட்டியிட்ட நாமல் ராஜபக்ஸ, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, விஜயதாஸ ராஜபக்ஸ, திலித் சுசந்த ஜயவீர, சரத் மனமேந்திர, பிரியந்த புஸ்பகுமார விக்ரமசிங்க, கே.கே.பியதாஸ, சிறிபால அமரசிங்க, சரத் கீர்த்திரத்ன, லலித் டி சில்வா ஆகியோர் கட்டுப்பணத்தை இழந்துள்ளனர்.

அத்துடன், தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன், மயில்வாகனம் திலகராஜ், அபுபக்கர் மொஹமட் இன்பாஸ், ஏ.எஸ்.பி.லியனகே, பானி விஜேசிறிவர்தன, அஜந்த டி சொய்சா, பத்தரமுல்லே சீலரத்ன தேரர், நுவன் சஞ்சீவ போபகே, கே.ஆனந்த குலரத்ன ஆகியோரும் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், ஓஷல லக்மால் அனில் ஹேரத், ஜனக்க பிரியந்த குமார ரத்நாயக்க, அக்மீமன தயாரத்ன தேரர், கே.ஆர்.கிஷான், பொல்கம்பொல ராலலாகே சமிந்த அநுருத்த, அநுர சிட்னி ஜயரத்ன, சிறிதுங்க ஜயசூரிய ஆகியோரும் கட்டுப்பணத்தை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மகிந்த தேவகே, மொஹமட் இல்லியாஸ், லக்ஸ்மன் நாமல் ராஜபக்ஸ, அன்டனி விக்டர் பெரேரா, கீர்த்தி விக்ரமரத்ன, மரக்கலமானகே பிரேமசிறி, பி.டபிள்யூ.எஸ்.கே.பண்டாரநாயக்க, டி.எம்.பண்டாரநாயக்க, அகம்பொடி பிரசங்க சுரஞ்ஜீவ அனோஜ் டி சில்வா, அநுருத்த ரணசிங்க ஆராய்ச்சிகே ரொஷான் ஆகியோரும் 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் கட்டுப்பணத்தை இழந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Nine Arch Bridge Ella Sri Lanka 35 1
செய்திகள்இலங்கை

ஒன்பது வளைவுப் பாலம் விளக்குத் திட்டம் ஒத்திவைப்பு: தனியாரின் நிலப் பிரச்சினை காரணம்!

உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமான தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தில்...

articles2FjYITDpH4jwEQ9VfnNT42
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் புதிய கிளை அலுவலகம் இன்று திறந்து வைப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) மன்னார் கிளைக்கான புதிய அலுவலகம் இன்று (நவம்பர் 23) காலை,...

images 5 1
செய்திகள்உலகம்

லண்டனில் பலஸ்தீன ஆதரவுக் குழு தடையை எதிர்த்துப் போராட்டம்: 90 பேர் கைது!

பிரித்தானிய அரசாங்கம் பலஸ்தீனத்திற்கு ஆதரவான குழுவொன்றைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், அதற்கு...

Woman Harassment
உலகம்செய்திகள்

சக பெண் விமானி மீது பாலியல் பலாத்கார முயற்சி: பெங்களூருவில் சீனியர் விமானி மீது வழக்குப்பதிவு!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த 26 வயது விமானி ஒருவர், தான் வேலை செய்யும் விமான...