துபாயில் பதுங்கியுள்ள பாதாள உலக குற்றவாளிகள்
இலங்கைசெய்திகள்

துபாயில் பதுங்கியுள்ள பாதாள உலக குற்றவாளிகள்

Share

துபாயில் பதுங்கியுள்ள பாதாள உலக குற்றவாளிகள்

இலங்கையை சேர்ந்த பாரிய பாதாள உலக குற்றவாகிகளாகக் கருதப்படும் 34 குற்றவாளிகள் துபாயில் தலைமறைவாக இருப்பதாக பொலிஸ் உளவுத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது என தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், பாரிய போதைப்பொருள் கடத்தல், இலங்கையில் உள்ள பணக்காரர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் கப்பம், ஒப்பந்தப் பணத்திற்காக மனித கப்பம் போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபட்டு 34 பாதாள உலக குற்றவாளிகளே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இவர்களில் சிலருக்கு இதற்கு முன்னரே சர்வதேச சிவப்பு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அனனசி மொரில், கொஸ்கொட சுஜீ, கிஹான் பொன்சேகா மற்றும் சித்திக் என்ற பாதாள உலக குற்றவாளிகள் தற்போது துபாயில் பாரிய போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக பொலிஸ் புலனாய்வு விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், ஹினடயான மகேஷ், கெஹெல்பத்தர பத்மே, சீதுவே வருண, அஹுங்கல்லே லொகு பட்டி மற்றும் சஞ்சீவ, அங்கொட ஜிலே, கஞ்சிபானி இம்ரான், மன்னா ரமேஷ், கொஸ்கொட டில்ஷான், அஹுங்கல்ல மதுஷான் அப்ரு, நதீஷ் அப்ரு, கெசல்வத்தே தனுக, தனுக, டன்கனேஷ், டன்கனேஷ், டன்கனேஷ். சுன்னா, துபாய் வருணா என்ற பாதாள உலக கும்பல் துபாயில் தலைமறைவாக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

கரந்தெனியவைச் சேர்ந்த சுத்தா மற்றும் ராஜு, மிதிகமவைச் சேர்ந்த ருவன் ஜயசேகர, டிலான் தரங்க (ஹரக்கட்டாவின் சீடர்கள்), நவகமுவ பிரதேசத்தை சேர்ந்த லாலியா, கொலன்னாவைச் சேர்ந்த தனுஷ்க, அங்கொட பிரியங்கர, அவிஷ்க என்ற கிரிகொல்ல, சதுர்க பட்ட மஞ்சு ஆகியோர் இலங்கையில் காணப்படும் போதைப்பொருள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாதாள உலக குண்டர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதையடுத்து மினுவாங்கொடை, ஹினாதயான கட்டுநாயக்க உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பாதாள உலகக் கும்பலின் அச்சுறுத்தல்களால் அச்சமடைந்த பல செல்வந்தர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்யாமல் பாதாள உலகக் கும்பல்களிடம் கப்பம் பெற்று உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் தென் மாகாணத்தில் இடம்பெற்ற கொலைகள் அனைத்திற்குமான காரணம் துபாயில் தலைமறைவாகி இருக்கும் குறித்த பாதாள உலக குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களே என தற்போது தெரியவந்துள்ளது.

இந்த கொலைகளில் பெரும்பாலானவை போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகராறுகளால் நடந்தவை என கூறப்படுகிறது.

இந்நிலையில் குறித்த பாதாள உலக குண்டர்களை கைது செய்து நாட்டுக்கு கொண்டு வர முடிந்தால், நாட்டில் பாதாள உலக குற்றங்களையும் போதைப்பொருள் கடத்தலையும் 80% குறைக்க முடியும் என பொலிஸ் புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...