துபாயில் பதுங்கியுள்ள பாதாள உலக குற்றவாளிகள்
இலங்கைசெய்திகள்

துபாயில் பதுங்கியுள்ள பாதாள உலக குற்றவாளிகள்

Share

துபாயில் பதுங்கியுள்ள பாதாள உலக குற்றவாளிகள்

இலங்கையை சேர்ந்த பாரிய பாதாள உலக குற்றவாகிகளாகக் கருதப்படும் 34 குற்றவாளிகள் துபாயில் தலைமறைவாக இருப்பதாக பொலிஸ் உளவுத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது என தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், பாரிய போதைப்பொருள் கடத்தல், இலங்கையில் உள்ள பணக்காரர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் கப்பம், ஒப்பந்தப் பணத்திற்காக மனித கப்பம் போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபட்டு 34 பாதாள உலக குற்றவாளிகளே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இவர்களில் சிலருக்கு இதற்கு முன்னரே சர்வதேச சிவப்பு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அனனசி மொரில், கொஸ்கொட சுஜீ, கிஹான் பொன்சேகா மற்றும் சித்திக் என்ற பாதாள உலக குற்றவாளிகள் தற்போது துபாயில் பாரிய போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக பொலிஸ் புலனாய்வு விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், ஹினடயான மகேஷ், கெஹெல்பத்தர பத்மே, சீதுவே வருண, அஹுங்கல்லே லொகு பட்டி மற்றும் சஞ்சீவ, அங்கொட ஜிலே, கஞ்சிபானி இம்ரான், மன்னா ரமேஷ், கொஸ்கொட டில்ஷான், அஹுங்கல்ல மதுஷான் அப்ரு, நதீஷ் அப்ரு, கெசல்வத்தே தனுக, தனுக, டன்கனேஷ், டன்கனேஷ், டன்கனேஷ். சுன்னா, துபாய் வருணா என்ற பாதாள உலக கும்பல் துபாயில் தலைமறைவாக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

கரந்தெனியவைச் சேர்ந்த சுத்தா மற்றும் ராஜு, மிதிகமவைச் சேர்ந்த ருவன் ஜயசேகர, டிலான் தரங்க (ஹரக்கட்டாவின் சீடர்கள்), நவகமுவ பிரதேசத்தை சேர்ந்த லாலியா, கொலன்னாவைச் சேர்ந்த தனுஷ்க, அங்கொட பிரியங்கர, அவிஷ்க என்ற கிரிகொல்ல, சதுர்க பட்ட மஞ்சு ஆகியோர் இலங்கையில் காணப்படும் போதைப்பொருள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாதாள உலக குண்டர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதையடுத்து மினுவாங்கொடை, ஹினாதயான கட்டுநாயக்க உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பாதாள உலகக் கும்பலின் அச்சுறுத்தல்களால் அச்சமடைந்த பல செல்வந்தர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்யாமல் பாதாள உலகக் கும்பல்களிடம் கப்பம் பெற்று உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் தென் மாகாணத்தில் இடம்பெற்ற கொலைகள் அனைத்திற்குமான காரணம் துபாயில் தலைமறைவாகி இருக்கும் குறித்த பாதாள உலக குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களே என தற்போது தெரியவந்துள்ளது.

இந்த கொலைகளில் பெரும்பாலானவை போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகராறுகளால் நடந்தவை என கூறப்படுகிறது.

இந்நிலையில் குறித்த பாதாள உலக குண்டர்களை கைது செய்து நாட்டுக்கு கொண்டு வர முடிந்தால், நாட்டில் பாதாள உலக குற்றங்களையும் போதைப்பொருள் கடத்தலையும் 80% குறைக்க முடியும் என பொலிஸ் புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...