21 13
இலங்கைசெய்திகள்

இந்த வருடத்துக்குள் இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 333 இந்தியர்கள் 333 Indians Entered Sri Lanka Illegally

Share

இந்த வருடத்துக்குள் இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 333 இந்தியர்கள் 333 Indians Entered Sri Lanka Illegally

இலங்கை கடற்படையினர், 2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 45 இந்திய இழுவை படகுகளை கைப்பற்றியுள்ளதுடன், 333 இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து நேற்றும் 11 இந்தியர்களின் இழுவை படகு ஒன்று கைப்பற்றப்பட்டது.

இந்த இழுவை படகு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேவேளை வெளிநாட்டு மீன்பிடி இழுவை படகுகளின் சட்டவிரோத கடற்றொழில் நடைமுறைகளை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை கடற்பரப்பில் வழக்கமான கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருதாக இலங்கையின் கடற்படை தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த வருடத்தில் இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையின்போது இலங்கையின் கடற்படை உறுப்பினர் ஒருவரும், இரண்டு இந்திய கடற்றொழிலாளர்களும் மரணமாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 172a2f580a
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியின் அந்நியச் செலாவணி நிலைத்தன்மைக் கூற்றுக்கு ஆதாரமில்லை: புபுது ஜெயகொட குற்றச்சாட்டு!

இலங்கையின் இறக்குமதிகள் அதன் ஏற்றுமதி வருவாயை விட அதிகமாக வளர்ந்துள்ளதால், நாட்டின் செலுத்துமதி சமநிலை பற்றாக்குறை...

25 690d6d53c26d1
செய்திகள்அரசியல்இலங்கை

விலங்கு நலனுக்கு நிதி ஒதுக்கி, மருத்துவர்களைத் தக்கவைக்கத் தவறிவிட்டது – வைத்தியர் சமல் சஞ்சீவ கடும் விமர்சனம்!

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவரான வைத்தியர் சமல் சஞ்சீவ, 2026ஆம்...

l78020250411143138 1296x700 1
செய்திகள்உலகம்

சீனா-அமெரிக்கா வர்த்தகப் பதற்றம் தணிப்பு: முக்கிய உலோகங்கள் மீதான ஏற்றுமதி தடை தற்காலிக நீக்கம் – கிராஃபைட் கட்டுப்பாடுகளும் நிறுத்தம்!

சீனா, அமெரிக்காவுக்கான முக்கிய உலோகங்கள் மீதான தனது ஏற்றுமதித் தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை,...