தினமும் நாளொன்றுக்கு 3000 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படக் கூடிய வாய்ப்பு நிலவுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது இலங்கையில் பதிவாகும் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது. நாளொன்றுக்கு 3000நோயாளிகள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உண்மையான தரவுகள் ஊடகங்களில் இதுவரை வெளியாகவில்லை. வைத்தியசாலைகள் நிரம்பியுள்ளன. ஏற்கனவே இருந்த பல சிகிச்சை மையங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன .
சிகிச்சை மையங்கள் இப்போது முழுவதுமாக நிரம்பி வழிகின்றது. நோயாளர்கள் இவ்வாறு தொடர்ந்து அதிகரித்தால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.
தேவைக்கேற்ப வைத்தியசாலைகளில் கொள்ளளவை அதிகரிக்கும் 6 வைத்தியசாலை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க கோவிட் தொற்றுநோயின் எந்தவொரு புதிய மாறுபாட்டையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் சுகாதாரப் பிரிவிடம் இருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
Leave a comment